Posts

இறைவன்

காலை வணக்கம் புலப்படாதவனாக இருந்தாலும் ஐம்புலன்களின் பேரன்பு விழுமியக் கட்டகத்தில் கட்டுப்படுபவனே அந்த ஆண்டவன். இந்த நாள் நமக்காக.

மௌனம்

காலை வணக்கம். மௌனத்தின் அதிர்வுகளை வாசிக்கத் தெரிந்தவனே ஞானி ஆகிறான். இந்த நாள் நமக்காக

இன்னலும் இன்பமும்

காலை வணக்கம். ஒரு காற்றுக்கு சாய்ந்தால்  மறு காற்றுக்கு நிமிர்ந்து நிற்கும் அந்த நாணல்... ஒரு நேரத்தில் காய்ந்த புல் மறுமழைக்கு பசுமை போர்த்தி நிற்கும்... பறக்கும் நாளெல்லாம் இரை கொடுக்கும் திசையாக பறவைக்கு என்றுமே இருந்ததில்லை.. குனிந்து நிமிர்ந்த குழந்தை தான் கனிந்து வளர்ந்து வாழ்வு பெறும்...  ஆம்... காலச்சக்கரத்தின் சுழற்சியில் இன்னலும் இன்பமும்  பின்னியே கிடக்கும்... இன்று இல்லையெனில் நாளை நிச்சயமாய் விடியல் வரும்... நம்பிக்கையோடு நடப்போம்... இந்த நாள் நமக்காக.

வார்த்தைகள்

காலை வணக்கம் அடுக்கப்பட்ட கற்கள் நூல் அளவையின் நேர்கோட்டில் நின்றால் அழகும் பாதுகாப்பும் நிச்சயம். பொறுக்கி எடுக்கப்பட்ட வார்த்தைகள் பொறுமையாய் உரையாடல்களில் கோர்க்கப்படும் போது உறவுகள்  நிச்சயம். இந்த நாள் நமக்காக.

தனித்துவம்

காலை வணக்கம் ஒரு புள்ளி ஒரு வாக்கியத்தின் முடிவு. சில நேரங்களில் மூன்று புள்ளிகள் வாக்கியத்தின் தொடர்ச்சி. ஒரு மரம் தனித்து இருந்தால் எல்லோரின் கவனமும் அதன் மேலே. பல மரங்கள் சேர்ந்திருந்தால் அதுவும் மறக்கப்படலாம். சில நேரங்களில் கொள்கைக்காக, தனித்துவத்திற்காக ஒதுக்கப்படலாம்.... ஆனால் கால ஓட்டத்தில் நீ தோப்பாக மாறுவாய்...  நம்பிக்கையோடு இரு...   இந்த நாள் நமக்காக

இப்படித்தான்...

காலை வணக்கம். காற்றடித்த திசையில் காகிதங்கள் பறக்கலாம் ....  ஓட்டத்தின் வேகத்தில் நதிகள் திசைகளை வரையறுத்து பயணிக்கலாம்...  இரைகளைத்தேடி இறக்கைகளை  விரிக்கும் பறவைகள் கூட பாதைகளை மாற்றலாம்...  ஆனால் பகுத்தறிவு பெற்ற மனிதன் 'எப்படியும்' என்பதைவிட 'இப்படித்தான்' என்று வாழும் போதுதான் மானுடத்திற்கு பெருமை...  இறைவனுக்கும் புகழ் சேர்க்கிறான்          இந்த நாள் நமக்காக.

ஈரமான இதயம்...

காலை வணக்கம். காலஓட்டத்தில் பூத்திருக்கும் சில ஆச்சரியங்கள்... காகிதத்தில்  கனவு மாளிகை கடல் மணலில் சிற்பங்கள் நூல் அடுக்குகளில் ஓவியங்கள் சொல் வரிசைகளில் மந்திரங்கள் ஒலியின் வேகத்தைவிட விமானங்கள் வீட்டின் முற்றத்தில் சொகுசுகள் எல்லாம் சரிதான் ஆனால் இதயங்களை மட்டும் ஈரமாய் வைத்துக்கொள்ள மறுப்பது ஏன்? மானுடமே! தோழமைக்கு நீரூற்றி  தெய்வீகம் காணலாமே? இந்த நாள் நமக்காக.